புதுச்சேரி, ஆக.17- பதவி பிராமானம் மீறியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் 3 வாரங்க ளுக்குள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அப்பதவியில் நீடிக்க தகுதி யிழந்தார் என்ற அடிப்படையில் அவரை உள்துறை அமைச்சகம் பதவிநீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், புதுச்சேரி பிரதேசக்குழு உறுப்பினருமான தா. முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீதிப்பேராணை மனு என்.3596/2018 தாக்கல் செய்து அது நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. துணை நிலை ஆளுநர் மற்றும் மத்தியரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் மூன்று வாரத்திற்கு விசா ரணை ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபையில் தலையீடு
தா.முருகன் தாக்கல் செய்திருந்த புகார் மனுவில் கிரன்பேடி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நீதித்துறை உட்பட மற்ற அதிகாரங்களில் முறை மீறி தலையிட்டதால், அவர் அரசியலமைப்பு சட்டப்படி எடுத்துக் கொண்ட ரகசிய பிராமானத்தை மீறியதால், அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.