கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 16 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக என ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
10 பேருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், 6 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், 16 பேரும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.