tamilnadu

img

விஷச் சாராயம் குடித்த 16 பேர் கவலைக்கிடம் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 16 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக என ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
10 பேருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், 6 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், 16 பேரும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.