tamilnadu

img

புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17 வரை விடுமுறை!

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் கழிவறையை பயன்படுத்திய மேலும் ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.