முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை யொட்டி புதுச்சேரி அர சின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முருகா சிக்னலில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உருவச் சிலைக்கு முதல்வர் நாரா யணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.