tamilnadu

img

மருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

மருத்துவர்கள் போராட்டம் முடியும் வரை ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.
    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை  வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 8 முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும். என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.