tamilnadu

புதுச்சேரி சட்டசபை ஊழியருக்கு கொரோனா

புதுச்சேரி, ஜூன் 1- புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சராசரியாக 5 என  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில்  உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்தில் முதல்வரின் நிவா ரண நிதியை வழங்கும் அலுவலகம் உள்ளது. அங்கு பணி யாற்றி வரும் ஊழியர் ஒருவர் அண்மையில் சென்னைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. அவரை  பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இதனால் அவரோடு பணியாற்றும் ஊழியர்கள் அனை வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்க ளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை  கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை அலுவலக வளாகம் மற்றும் வளாகத் திற்குள் உள்ள முதல்வர், அமைச்சர்கள் அறைகள் உள்ளிட்ட அனைத்து அலுவல அறைகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்  கள் கிருமி நாசினி தெளித்தனர். சட்டப்பேரவைக்கு  வரும்  பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளது. புதுவையில் இதுவரை 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டள்ளனர்.