tamilnadu

சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் கைது

 பொன்னமராவதி, மார்ச் 10- புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த பதினேழு வயது சிறுமி ஒருவர் 7 மாத கர்ப்ப மாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் அந்த மாணவியிடம் விசாரணை செய்தனர். அப்போது பரீட்சை  விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த போது தங்களது வீட்டு அருகே வசித்து வரும் ராஜ்குமார் (34) என்பவர் குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதன் பின்பு தன்னை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகவும் கூறி யுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த னர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குளிர்பானத் தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;