புதுக்கோட்டை, செப்.26- ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை கட்டா யமாக்க வேண்டும். மாணவர்கள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் காட்டி அரசுப்பள்ளிகள் எதையும் மூடக்கூடாது. மூடப்பட்ட பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும். மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை-2019-ஐ திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச் சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக புதுக் கோட்டை மாவட்டத்தில் கடந்த புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சா ரத்திற்கு இடையே வியாழக்கிழமை யன்று புதுக்கோட்டையில் செய்தியா ளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் கூறி யது: மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ள தேசிய கல்விக்கொள்கை 2019-ல் மாணவர்களுக்கு பாதகமான பல சரத்துக்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில மக்களின் உரிமையை அது வெகுவாகப் பாதிக்கிறது. மாணவர்கள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கிறது. 3 வயதிலேயே முறையான கல்வி தொடங்குவதாகக் கூறுகிறது. 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை வலி யுறுத்துகிறது. 8 வயதில், 10 வயதில் பொதுத் தேர்வு என்பது மாணவர்கள் மத்தியில் கடும் மன அழுத்தத்தை உண்டாக்கும். கல்வியில் முன்னேறிய எந்த நாட்டிலும் இதுபோன்று இல்லை. இது ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நடவடிக்கை யாக உள்ளது. மாணவர்களின் கல்வி உரிமை யைப் பாதுகாக்கும் பொறுப்பு அர சாங்கம், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் உள்ளது. எனவே, மாணவர்களுக்கு கல்வி எந்த வகை யிலும் பாதிக்காத வகையில் முதல் பருவ விடுமுறை தினத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலம் முழுவதும் மேற்கண்ட பிரச் சார இயக்கத்தை கடந்த 25-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறோம். தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து நடைபெற்று வரும் இந்தப் பிரச்சார இயக்கம் வரு கின்ற 29-ஆம் தேதி கரூரில் நிறைவடை கிறது. குரூரில் மிகச்சிறந்த கல்வியா ளர்களை அழைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழு வதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரி யர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந் தாங்கி, அரிமளம், திருமயம், பொன்ன மராவதி அன்னவாசல், விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்றது. வியாழக்கிழமையன்று புதுக் கோட்டையில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு மாவட்டத் தலைவர் த.ஜீவன் ராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ச.மயில், முன் னாள் மாநிலத் தலைவர் தி.கண்ணன், தமுகஎகச மாநில நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன், அறிவியல் இயக்க நிர்வாகி அ.மணவாளன், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, மாநில செயலாளர் ஹேமலதா ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் ச.வின்சென்ட், பொருளாளர் கோ.சக்திவேல், மற்றும் க.கருப்பையா, முத்துச்சாமி, பேச்சி யம்மாள், நடனம், ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆலங் குடி விழுதுகள் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.