tamilnadu

வீடு, தோட்டங்களில் காய்கறி உற்பத்தி செய்ய மானியத்தில் விதைகள்

புதுக்கோட்டை, ஆக.7- வீடு, தோட்டங்களில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி  செய்ய 40 சதவீத மானி யத்தில் காய்கறி விதைகள் தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது.  இதுகுறித்து புதுக்கோ ட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரி விக்கையில், தோட்டக்க லைத் துறையின் மூலம் புது க்கோட்டை மாவட்டத்தில் 10,000 எண்ணிக்கையில் காய்கறி சிறு தளைகள் நடப்பாண்டில் விநியோகம் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளையிலும் வெண்டை விதைகள்-3 கிராம், அவரை விதைகள் - 1  கிராம், தட்டைபயறு விதை கள்-2 கிராம், கொத்தவரை விதைகள் - 2 கிராம், கத்தரி  விதைகள் -2 கிராம் என ரூ.25 மதிப்புடைய ஐந்து வகை யான காய்கறி விதைகள் 40  சதவீத மானியத்தில் வழங்க ப்பட உள்ளது.  விரும்பும் பயனாளிகள் தோட்டக்கலைத்துறை அலு வலர்களால் வழங்கப்படும் விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு அல்லது குடும்ப அட்டை அல்லது வீட்டுவரி ரசீது ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றினை வழங்கி 40 சத வீத மானியத்தில் விதைகள் மூலம் நஞ்சில்லா காய்கறி களை உற்பத்தி செய்து பயன்பெறலாம். மேலும், விப ரங்களுக்கு 7094382390 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என்றார்.