tamilnadu

வேன்- லாரி மோதல்: 2 பெண்கள் பலி: 14 பேர் படுகாயம்

புதுக்கோட்டை, டிச.5- புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் கிராமத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சரக்கு வேனில் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள மங்கனூரில் உள்ள துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தனர். சரக்கு வேனை முள்ளூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் ஓட்டினார். சரக்கு வேன் இச்செடி அருகே சென்று கொண்டிருந்தது. பின்னால் ஒரு லாரி கந்தர்வகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலை யில் லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மீது மோதி யது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையின் ஒரத்தில் கவிழந்தது. இதில் முள்ளூர் கிராமத்தை சேர்ந்த பெரமையா மனைவி அம்சவள்ளி (வயது 50), முத்துக்குமார் மனைவி  மாதவி (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் சரக்கு வேனில் சென்ற முருகேசன் மனைவி தேவி, லெட்சுமணன் மனைவி சுந்தரவள்ளி, முருகன் மனைவி ராஜாத்தி உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இதில் 2 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. விபத்து குறித்து சம்பட்டுவிடுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;