tamilnadu

img

தெம்மாவூர் நிழற்குடை மீண்டும் தகர்ப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.3- புதுக்கோட்டை மாவ ட்டம் தெம்மாவூரில் சாதிய வாதிகள் நிழற்குடையைத் தகர்த்துள்ளனர். இவ ர்கள் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாநி லக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பேசினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குன்றாண்டார்கோவில் ஒன்றியம் தெம்மாவூரில் உள்ள பேருந்து நிழற்கு டையில் தலித்துகள் அம ர்வதை சகித்துக் கொள்ள முடியாத சாதியவாதிகள் தொடர்ந்து இருக்கைகளை சேதப்படுத்தி வந்தனர். சேதப்படுத்தப்பட்ட நிழற்கு டையை மீண்டும் அமைக்க வும், தேநீர் கடைகளில் நில வும் இரட்டைகுவளைத் தீண்டாமைக்கு முடிவு கட்ட வும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி கடந்த  செப்.30 அன்று நேரடி இயக்கத்திற்கான போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்.28 அன்றே வரு வாய்த்துறையினர் இடி க்கப்பட்ட பேருந்து நிழற்கு டையை மீண்டும் அமை த்துக் கொடுத்தனர். தேநீர் கடையிலும் இரட்டைக்கு வளை முறை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என காவல்துறை  எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து த.தீ.ஒ. முன்னணியின் பேராட்டம் ஒத்திவைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தது.  இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகா லையில் சாதியவாதிகள், மீண்டும் புதிதாக கட்டப்பட்ட இருக்கையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சா தியவாதிகளின் இது போன்ற தீண்டாமை வெறிச்செயலை ஒரு போதும் ஏற்க முடியாது. இத்தகைய இழிசெயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து இத்தகைய சாதி வெறிச் செயலில் ஈடுப டும் குற்றவாளிகளை உடன டியாக கைது செய்ய வேண்டும். ஜாமீனில் வெளி வர முடியாத எஸ்சி, எஸ்டி  வன்கொடுமை சட்டப்பி ரிவில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தெம்மாவூரில் உள்ள தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தவறும் பட்ச த்தில் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி யோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.