tamilnadu

img

விபரித செயலால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!

புதுக்கோட்டை,டிசம்பர்.12- புதுக்கோட்டையில் வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே அபிராமி என்பவருக்கு கணவர் மற்றும் மாமியார் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் குழந்தை பிரசவத்தின்போதே உயிரிழந்துள்ளது.  
அபிராமி உடல்நிலை மோசமான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட  விசாரணையில் அலோபதி மருந்தின் மீது நம்பிக்கையில்லாததால் யூடியூப்-ஐ பார்த்து பிரசவம் பார்த்ததும், கர்ப்பமாக இருந்ததை சுகாதாரத்துறையினரிடம் மறைத்ததும் தெரியவந்துள்ளது.