அறந்தாங்கி, நவ.1- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு மையம், தமிழக அரசு உயர்கல்வித் துறை மற்றும் ரூசா இணைந்து நடத்திய மாணவர்களின் திறன் வளர்ப்பு திட்டத்தில் இக்கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேரை தேர்ந்தெடுத்து சுற்றுலா மேலாண்மை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ஜெ.சுகந்தி தலைமை ஏற்று உரையாற்றினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் துணை இயக்குநர் முனை வர் என்.பிரசன்னா திட்டத்தை துவக்கி வைத்து சுற்றுலா பற்றி விளக்கி கூறினார். முன்னதாக கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் கே.சீனிவாசன் வரவேற்று பேசினார். ஆங்கிலத் துறை பேராசிரியர் பூபதிராஜா, கணினி அறிவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி திறன் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.