tamilnadu

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கேட்டு போராட்டம்

பொன்னமராவதி, நவ.20- புதுக்கோட்டை பொன்னமராவதியில் உதவித் தொகை வழங்க வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர் ஆர்.பிரதாப்சிங் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் வி.பி.நாக லிங்கம் துவக்கி வைத்தார். விவசாயத் தொழி லாளர் சங்க மாநில செயலாளர் நா.சாத்தையா விளக்க உரையாற்றினார். சிபிஐ ஒன்றிய செய லாளர் செல்வம், வெள்ளைக்கண்ணு, வெள் ளைச்சாமி, மாரிக்கண்னு, பெரியாண்டி, பழனிச் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளர்க ளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

;