அறந்தாங்கி, ஆக.5- புதுக்கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவிலை அடுத்த பெரு நாவலூரில் இயங்கி வரும் அற ந்தாங்கி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் தமிழக அரசு உயர்கல்வி துறை அறிவுறுத்தல்படி இணைய வழியாக மாணவர்க ளுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டது. முதலாவதாக கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் தலை மையில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர் கலந்துகொண்ட கூட்டம் நடை பெற்றது. இதில் எப்படி வகுப்பு எடுப்பது, செயலியை பயன்ப டுத்தும் முறை, மாணவர்களுக்கு எப்படி தகவல் தெரிவிப்பது என முதல்வர் அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மூன்றாம் ஆண்டு ஆங்கில துறை மாண வர்களுக்கு வகுப்புகளை கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் இணைய வாயிலாக தொடங்கி வைத்தார்.