tamilnadu

நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனே தொடங்குக! இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 6- கொரோனா பாதிப்பின் காரணமாக மக்க ளின் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ள சூழ லில் உடனடியாக நூறு நாள் வேலையை தொ டங்க வலியுறுத்தி இடதுசாரிக் கட்சியினர் புதன்கிழமையன்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இடதுசாரிக் கட்சிகளின் புதுக்கோட்டை மாவட்ட கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார்.  சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிபிஐ(எம்.எல்) மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சிய ருக்கு கூட்டாக நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொ) கிருஷ்ணனி டம் அளித்த மனுவில், கொரோனா பாதிப்பின்  காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலு மாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தேவை களுக்காக மக்கள் தினந்தோறும் அல்லாடி வருகின்றனர். எனவே, மக்களின் வாழ்நிலை யைக் கணக்கில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்ட த்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். அனைத்துப் போக்கு வரத்து, கட்டுமானம், தையல், மீனவர் உள்ளிட்ட நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவ ருக்கும் அரசு அறிவித்துள்ள ரூ.1000 நிவா ரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்களை  வழங்க வேண்டும்.  வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவ ட்டங்களில் தங்கியிருக்கும் தொழிலா ளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவ தற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோ ட்டை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டம்  மற்றும் வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டி யவர்களை அழைத்து வருவதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் கடைக ளில் கூட்ட நெரிசல் அதிகமாகி கொரோனா தொற்று பாதிப்பை சமூகப் பரவலுக்கு இட்டுச் செல்லும். எனவே, தமிழக அரசு மே 17 வரை டாஸ்மாக் கடைகளை திறப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்  தெரிவிக்கப்பட்டன.