tamilnadu

புதுக்கோட்டை ,கும்பகோணம், திருவாரூர் முக்கிய செய்திகள்

மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் உயிரிழப்பு 
அறந்தாங்கி, நவ.27- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டை கிராமத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாடுகளை வீட்டின் அருகே கட்டியிருந்த போது மின் கம்பத்தில் இருந்த மின்கம்பி யில் அதிக மின்னழுத்தம் காரணமாக அறுந்து விழுந்தது.  இதில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன. அப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் 20 வருடத்திற்கு மேலாக மிகவும் பழமையான கம்பி களாக இருப்பதால் அனைத்து மின் கம்பிகளை யும் மாற்ற வேண்டும். இறந்த மாட்டிற்கு உரிய நிவார ணங்களை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட  உதவி வழங்கல்
கும்பகோணம், நவ.27- கும்பகோணம், ஆடு துறை, பாபநாசம் ஆகிய பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. தமிழக வேளாண் மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கும்பகோணம், கோட்டாட்சியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.இராமநாதன் ஆகியோர் இலவச பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை, அரசு நிதி உதவி வேளாண்மை உபகரணங்க ளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம்
திருவாரூர், நவ.27- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசுனுடைய திட்டங்கள் மூலமாக மாவட்ட தொழில் மையத்தால் வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் சுய வேலைவாய்ப்பு ஏற்படு த்தும் கடன் திட்டங்கள், புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு முனைத் தீர்வுக்குழு ஆகி யவை குறித்து திருவாருர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 29 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சி யர் தலைமையில் மாவட்ட அளவில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு முகாம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் செல்வீஸ் (பிளாட்டினம் மஹால்) நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர், அரசு அதி காரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் சங்க பிரதி நிதிகள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயன டைந்துள்ளவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். மேலும். முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களின் விண்ணப்பங்கள் வங்கிக ளுக்கு பரிந்துரைக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்க ளுக்கு உதவி அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனவே. தகுதியும். விருப்ப மும் உள்ளவர்கள் இவ் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள் ளார்.