tamilnadu

img

விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 பொன்னமராவதி: புதுக்கோட்டை பொன்னமராவதியில் இடதுசாரிகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பகுருதீன், சிபிஐ ஒன்றிய பொருப்பாளர் ஆர்.பிரதாப்சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் பி.ராமசாமி, சிபிஐ விபி.நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஐ மாநில குழு உறுப்பினர்கள் கே.ஆர். தர்மராஜன், ஏ.எல்.ராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள்  கே.குமார், வி.ஆர்.எம்.சாத்தையா, எம்.மாயழகு, ஏ.செளந்தர ராஜன், சிஐடியு ஏ.தீன், கே.ராஜா, சிபிஐ ராசு, லெட்சுமி, திராவிடர் கழக ஒன்றிய தலைவர் ஆறு முகம், மக்கள் பாதை இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தரங்கம்பாடி: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் ஆக்கூரில் திங்களன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எ.ரவிச்சந்திரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், இராசையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்ட குழு உறுப்பினர்கள் காபிரியேல், கே.பி.மார்க்ஸ், பஷீர் அகமது, கண்ணகி உள்ளிட்டோர் உரையாற்றினர். நிறைவாக கிளைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.