tamilnadu

img

தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, மே 23- தொழிலாளர் விரோத நட வடிக்கைகளை கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டை பொன்னமராவதியில் ஆறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொன்னமராவதி உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருமயம் கோட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் அனைத்து தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்ட னர். அனைத்து போக்குவரத்து சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க் அருகே வி.குமரேசன் தலைமை யிலும், பேருந்து நிலையம் அருகே சாத்தையா தலைமை யிலும், கண்ணன் தலைமை யிலும், டாக்சி மார்க்கெட்டில் பாஸ்கர் தலைமையிலும், ஆட்டோ ஓட்டுனர் உரிமையா ளர் சங்கத்தின் சார்பில் காந்தி சிலை முன்பு பக்ருதீன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்: இதே போல் பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய அலுவலகம் முன்பு  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தொழிற் சங்க நிர்வாகிகள் பன்னீர் செல்வம், நாராயணன், சுகுமா றன், ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.