tamilnadu

img

புதுக்கோட்டை அருகே உத்தம சோழர் ஆட்சிக் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

புதுகை, செப்.23- புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகே கிளியூர் சிவன்கோவில் அருகே உத்தமசோழரின் பன்னி ரெண்டாவது ஆட்சிக்காலத்தில் (அதா வது கி.பி.982) பொறிக்கப்பட்ட கல் வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லி யல் ஆய்வுக்கழகத் தலைவர் கரு. ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண் டன், மு.முத்  ர், அ.பிரவீன் உள் ளிட்ட குழுவினர் தெரிவித்துள்ளது: இக்கல்வெட்டு கோப்பரகேசரி என்ற பட்டமுடையசோழ மன்னர் உத்த மசோழர் (கி.பி.970–985) ஆட்சியின் பன்னிரெண்டாவது ஆண்டை சேர்ந் தது. கல்வெட்டின் எழுத்தமைதி, ஆண்டுக் குறிப்பைக் கொண்டு கோப்பரகேசரி பட்டம் கொண்ட பராந்தகச் சோழரின் கல்வெட்டாக இருக்குமோ என ஐயம் கொண்டாலும், பராந்தக சோழர் தமது மூன்றாவது ஆட்சியாண்டிலேயே மதிரை கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயர் கொண்டிருப்பதையும் இப்பதம் இக்கல்வெட்டில் இன்மை யையும் கருத்திற்கொண்டு இதே பட்ட முடைய உத்தம சோழரின்காலத்தை யது என்று கருத முடிகிறது. இவ்வூர் தென்சிறுவாயில் நாட்டுப் பிரிவில் 1000 ஆண்டுகளுக்கு பும்கிளி யூர் என்றே அழைக்கப்பட்டுள்ளதை யும், இப்பகுதியில் வடசிறுவாயில் நாடு போல தென்சிறுவாயில் நாடு இருந்துள் ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தனிக்கல்லில் இருப்பதன் மூலம் இது செங்கல் (தளி) கட்டுமான மாக இருந்திருக்கும் எனக் கருதலாம். கல்வெட்டின் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் கால மாற்றத்தில் சிதைந் துள்ளன. இது நான்கரை அடி உயரம் இரண்டரை அடி அகலமுடையதாக உள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகளில் கல்வெட்டுப்பொறிப்பும், அதன் கீழ் புறத்தில் சூலகோட்டுருவமும் காணப் படுகிறது.
கல்வெட்டு சொல்லும் செய்தி
இம்மகாதேவர்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் இறையிலியாகவரி நீக்கித்தரப்பட்டுள்ளது. இந்நிலவரு வாயில் நாள் தோறும் திருவமிர்து படைக்க இருநாழி அரிசி தரப்பட்டுள் ளது. இந்நிலத்திற்கான வரி நீக்கத் தினை உள்ளூர் நிர்வாகத்தினரே செய் துள்ளனர். இறையாருக்கு நிலத்தை கொடையாக கொடுத்தவர் இன்னா ரென்று அறிய முடியவில்லை என்றா லும் சிறுவாயிநாட்டுபட்டன் என்பவரின் பெயர் இக்கல்வெட்டில் அறியப்படு வதால் அவரே நிலத்தை கொடுத்தவ ராகவோ அல்லது பெற்று இத்திருக்காரி யத்தை செய்தவராக கருதலாம்.  தென்சிறுவாயி நாட்டில் உத்தம சோழர் ஆட்சிக்காலத்தில் வரி நீக்கிய இறையிலி நிலம் வழங்கப்பட்டதையும் இதனை உள்ளூர் நிர்வாகத்தினர் கூடி அறிவித்தமையையும் பார்க்க முடிகிறது, இதன் மூலம் ஊர் சபை கள் கோயில் நிர்வாகத்தில் பங்காற்றிய மையை புரிந்து கொள்ள முடிகிறது இந்நிலத்தின் வருவாயின் மூலம் இறை வனுக்கு தினசரி பூசைக்கு உணவு படைக்க இரு நாழி அரிசி வழங்கப்பட்டி ருப்பதையும் அறிய முடிகிறது. இவ் வாறு கல்வெட்டு குறித்து மேற்கண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

;