புதுக்கோட்டை, செப்.7- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க புதுக்கோட்டை மாவட்ட 3-ஆவது மாநாடு புதுக் கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்தையா தலைமை வகித்தார். பி.பிரபாகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எம். வெள்ளைச்சாமி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சுப்பிர மணியன், கே.சதாசிவம், இரா.ராஜேந்திரசிங் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயலாளர் குரு.சந்திரசேக ரன் உரையாற்றினார். அவரிடம் கட்டிட நிதியாக சுமார் ரூ.2 லட்சம் சங்க உறுப்பினர்கள் தனித்தனியாக வழங்கினர். மாவட்டச் செயலாளர் பி.ஆழ்வாரப்பன், பொருளாளர் என். ராமச்சந்திரன் ஆகியோர் அறிக்கை களை முன்மொழிந்து பேசினர். மாநாட்டை வாழ்த்தி கருவூல அலு வலர் இ.மூக்கையா, கூடுதல் கரு வூல அலுவலர் அண்ணாத்துரை, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஜபருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.முத்துக் குமார், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணைச் செய லாளர் எஸ்.இளங்கோவன் ஆகி யோர் பேசினர். மாநாட்டில் தலைவராக எம். முத்தையா, துணைத் தலைவர் களாக என்.ராமச்சந்திரன், ஆர். சுப்பிரமணியன், பி.பிரபாகரன், கே. சதாசிவம், செயலாளராக பி.ஆழ்வா ரப்பன், இணைச் செயலாளர்களாக வி.ஜெகன்நாதன், இரா.ராஜேந்திர சிங், எம்.வெள்ளைச்சாமி, அ.மண வாளன், பொருளாளராக ஆர்.முரு கேசன் ஆகியோர் புதிய நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கலந்துகொண்டு கவி ஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை யாற்றினார். காப்பீட்டுக்கழக ஊழி யர் சங்க முன்னாள் கோட்டத் துணைத் தலைவர் எம்.அசோகன் நிறைவுரையாற்றினார். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதைப் போல மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊதியக்குழு நிலுவைத் தொகை களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.