பொன்னமராவதி, பிப்.23- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூரில் 753 காளைகள், 225 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொன்னமராவதி வட்டாட்சி யர் திருநாவுக்கரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர் என 18 பேர் மாடுகள் முட்டியதில் காயம் அடைந்தனர்.