பொன்னமராவதி, ஜூன் 7- புதுக்கோட்டை பொன்னமரா வதி ஊராட்சி ஒன்றியம் ஆல வயல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலை யில் ஆலவயல் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மக்கள் பாதை அமைப்பினர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை பதாகை களை ஆலவயல் பகுதிகளில் வைத்துள்ளனர். இது தொடர்பாக அகில இந் திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் சார்பில் அதன் மாநில பொருளாளர் எஸ்.சங்கர், ஆட்சி யர், திட்ட அலுவலர் ஆகி யோர்களிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது- ஆலவயல் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. பணித்தளத்திற்கே வராத வேலை அட்டைகளுக்கு பணம் எடுத்தது, வெளியூர்களில் குடி யிருப்பவர்களுக்கு இங்கே வேலை பார்த்ததாக தெரிந்தே தவறு செய்தது என பல வகை களில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆலவயல் ஊராட்சி மக்கள் தனிநபர்கள் மூலம் தாங்களிடம் கொடுத்த புகார் மனு மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என கூறி யுள்ளனர்.