புதுக்கோட்டை, அக்.25- புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போலியோ ஒழிப்பு தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். ஜெய் பார்த்தீ பன், வெங்கடாசலம், சிவாஜி, பஷீர் முகமது, ஓவியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் கோபால், கவிஞர். தங்கம்மூர்த்தி ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்வையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கி டையே போலியோ ஒழிப்பு குறித்து ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.