புதுக்கோட்டை, ஜூலை 8- தனிமைப்படுத்தப்பட்ட புதுக்கோட்டை ராணியர் மரு த்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக வாக்கி டாக்கிகளைப் பயன்ப டுத்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. புதுக்கோட்டை ராணி யார் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் கொ ரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. நான்கு தளங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதா லும், 200 நோயாளிகள் இரு ப்பதாலும் மருத்துவர் நோயா ளிகளுக்கு இடையேயான தொடர்பு மிகவும் கடின மாக இருந்தது. இதை சரி செய்வதற்காக காவல்து றையின் உதவியுடன் 4 வாக்கி டாக்கி பெறப்பட்டுள்ளன. காவல்துறை கண்கா ணிப்பாளர் டாக்டர் அருண் சக்திகுமார் நான்கு வாக்கி டாக்கிகளை மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்த ரத்திடம் வழங்கினார். மேலும் ஒரு குறிப்பிட்ட அறையில் உள்ள நோயா ளிகளிடம் உரையாட வேண்டும் என்றால், அங்கு செவிலியர் இந்த வாக்கி டாக்கி வைத்து நோயாளிகள் அதைத் தொடாமல் தொட ர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் இதில் வசதி இருப்பது குறிப்பிடத் தக்கது.