tamilnadu

img

‘அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்’

வடசேரிப்பட்டி பள்ளி விழாவில் புதுக்கோட்டை எஸ்.பி பேச்சு

புதுக்கோட்டை, நவ.27-  அரசுப் பள்ளியில் படித்துத்தான் நான் மருத்துவராகி பின் ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்தேன் என்றார் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பெ.வெ.அருண்சக்திகுமார். புதுக்கோட்டையை அடுத்த வடசேரிப் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தின 70-வது விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கி.ராணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பெ.வெ.அருண்சக்திகுமார், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்கிப் பேசினார். 

பின்னர் அவர் பேசுகையில், ‘அரசுப் பள்ளிகளில் படிக்கும் உங்களால்  எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனை யாளர்களாக உயர முடியும். நான் கூட அரசுப் பள்ளியில் படித்துத்தான் மருத்து வர் பட்டம் பெற்று பிறகு ஐபிஎஸ் அதிகாரி யாக உயர்ந்தேன். இந்தப் பள்ளியில் படிக்கும் நீங்கள் மிக, மிக பின்தங்கிய வறுமையில் வாடும் குடும்பத்திலிருந்து படிக்கிறீர்கள். பாடத்திட்டங்களை முறை யாகக் கற்பதோடு பொது அறிவுத் திறனை யும் வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் பல உயர்ந்த பொறுப்புகளுக்கு நீங்கள் வர வேண்டும். இதன் மூலம் உங்கள் பெற்றோ ருக்கும், இப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இவ்வூர் பொதுமக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார். முன்னதாக ஆசிரியர் ஹரிராம் வரவேற்க, ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார்.