அறந்தாங்கி, நவ.14- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கராத்தே பிரதர்ஸ் சோசியல் கிளப் கௌரவ தலைவர் கே.சி.சுரேஷ் குமார பள்ளிக்கு தரைதளம் (டைல்ஸ்) அமைத்து தந்ததற்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் கோமதி வரவேற்புரை நிகழ்த்தி னார். கராத்தே பிரதர்ஸ் சமூக அறக்கட்டைளை தலைவர் சுப்பிரமணியன் உரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா, கராத்தே போன்றவை நடை பெற்றன. பள்ளி ஆசிரியர்கள பார்த்திபராஜா, நித்யா, கிருத்தி கா, தமிழ்ச்செல்வி மற்றும் செல்வராஜ் கலந்து கொண்ட னர். நிறைவாக ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.