tamilnadu

img

தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கக் கோரி போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 27- தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கொ ரோனா கால நிவாரண நிதியாக மூன்று மாத சம்பளத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போ ராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நர்கள் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார். செயலாளார் சேதுராமன், பொருளாளர் தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. ஸ்ரீதர், செயலாளர் கே.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கே. சிவக்குமார், தலைவர் கே.ரெத்தின வேல், பொருளாளர் எஸ்.கார்த்திக கேயன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.அன்புமண வாளன் உள்ளிட்டோர் பேசினர்.

;