tamilnadu

img

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது  

 இராமேஸ்வரம்/அறந்தாங்கி, டிச.29- புதுக்கோட்டை மாவட்டம் - ஜெகதாபட்டினம் துறை முகத்திலிருந்து டிசம்பர் 27- ஆம் தேதி மூன்று விசைப்படகுகளில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்கள் அனை வரையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீன் பிடித் தொழிலுக்குப் பயன் படுத்திய மூன்று விசைப்படகு களையும் பறிமுதல் செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றுவிட்டது. இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விபரம்:- முத்தையன் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற முத்தையன் மகன் காளிதாஸ், கடம்பையா மகன் ராக்கப்பன், குணசேகரன் மகன் காளிதாஸ், ஆறுமுகம் மகன் ஆதவன், ஆறுமுகம் மகன் ஹரிஸ். சேகர் என்பவருக்குச் சொந்த மான படகில் சென்ற சேகர் மகன் சுந்தர் கணேசன் மகன் சின்னப் பாண்டி, ஜோதி மகன் பிரவீண், தனிக்கொடி மகன் ராஜாராமன். அண்ணாதுரை என்பவ ருக்குச் சொந்தமான படகில் சென்ற சந்திரசேகர் மகன் அண்ணாதுரை, காளிதாஸ் மகன் தம்பிராஜ், தம்பிதுரை மகன் முருகன் மற்றும் முத்து ஆகியோர்.

;