புதுக்கோட்டை, மே 11- அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு. அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தற்பொழுது மாவட்டத்தில் சில அத்தியாவசிய உண வுப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் வருகிறது.
எனவே, மாவட்டத் தில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் வணிகர்கள் நிர்ணயிக் கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவ டிக்கை மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்கென மாவட்ட நியமன அலு வலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட காவல்துறை, நகராட்சி அலு வலர்கள் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வணிகர்கள் அதிக விலைக்கு விற்றால் உணவு பாது காப்பு துறை, மாவட்ட நியமன அலு வலர் 99449-59595 என்ற அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.