பொன்னமராவதி, ஆக.6- பொருளாதார பேரழிவை கொரோனா வை காரணம் காட்டி மறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் எஸ்டிபிஐ கட்சி நகர தலைவர் ஏ.ஷேக் முகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.எஸ்.முகமது ஜியாவுதீன் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் முகமது இஸ்மாயில், துணைச் செயலாளர் மன்சூர் அலி, பொரு ளாளர் ஹாபிஸ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.