புதுக்கோட்டை, ஜூலை 31- டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர் தின விழா நடை பெற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலர் டி.சாந்தி தலைமை வகித்து பேசினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுத்தரம், திலகவதியார் திருவருள் ஆதீனம் தயா னந்த சந்திரசேகர சுவாமிகள், கவிஞர் தங்கம் மூர்த்தி, கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.