tamilnadu

img

விவசாயியின் டிராக்டரை திருடி விற்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, டிச.9- விவசாயியின் டிராக்டரை திருடி விற்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் எஸ்.மைக்கேல் ஒன்றிய துணைத் தலைவர் பி.முத்தமிழ்செல்வன், பொருளாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மானியம் பெற்று தர வேண்டும் என்று கேட்டதால் வெண்ணாவல் குடி விவசாயி வெள்ளைச்சாமியின் டிராக்டரை எஸ்.வி மோட்டார்ஸ் (சுவராஜ்) உரிமையாளர் உத்திரா பதி திருடி திருச்சியில் விற்றதை ஆலங்குடி காவல்துறை கையும் களவுமாக பிடித்தும் அவரை இது வரை கைது செய்யாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மானி யத்தை பெற்று தரவும், எஸ்.வி. மோட்டார்ஸ் (சுவராஜ்) லோன் முறை கேடுகளை தனி அதிகாரிகள் நிய மித்து விசாரிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  திருடு போன டிராக்டரை ஒன்றரை மாதத்தில் கண்டுபிடித்தும், 120 மணி நேரம் டிராக்டர் இயங்கி உள்ளது. டிராக்டரை நாங்கள் எடுக்கவில்லை என்று எஸ்.வி மோட்டார்ஸ் உரிமை யாளர் உத்திராபதி மற்றும் மேலாளர் முத்துவீரன் இருவரும் கூறினர். ஆயினும் விசாரணையின் போது திரு டியதை உறுதி செய்த பிறகும் (எப்ஐஆர்) போடப்பட்ட பிறகும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பீமராஜ்,வி, தொ.ச ஒன்றிய செயலாளர் ஏ.செந்தமிழ் செல்வன் ஆகியோர் பேசினார்கள்.