tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் பி.வீராச்சாமி மறைவு அனைத்துக் கட்சித் தலைவர்கள் இரங்கல்

புதுக்கோட்டை, ஆக.31-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.வீராச்சாமி(70) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். திங்கள் கிழமை நடை பெற்ற இறுதி நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர், கந்தர்வகோட்டை முன்னாள் ஒன்றியச் செயலாளர் மற்றும் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர் இயக்கங்களில் மாவட்ட ஒன்றிய அளவில் பல்வேறு  பொறுப்புகளில் சிறப்பாக பங்காற்றிய வர் தோழர் பி.வீராச்சாமி. புதுக்கோ ட்டை மாவட்டத்தில் குறிப்பாக கந்தர்வ கோட்டை வட்டாரத்தில் விவசாயிக ளுக்காக, விவசாயத் தொழிலாளர்க ளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலை மையேற்று நடத்தியவர். அவரது துணை வியார் லோகாம்பாள் தச்சங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு பெற்று சிறப்பான மக்கள் பணியாற்றி அனைத்துப் பகுதி மக்களின் நன்மதி ப்பையும் பெற்றதற்கு தோழர் வீராச்சா மியின் சிறப்பான வழிகாட்டலே காரணம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான போராளி தோழர் லெனின் சிறையிலிருந்து வெளிவந்து கட்சிப் பணியாற்றித் தொடங்கிய போது, அவரை பல்வேறு கிராமங்களுக்கு அழைத்துச் சென்று செங்கொடி இயக்கத்தை கந்தர்வகோட்டை வட்டா ரத்தில் வலுமிக்க கோட்டையாக வள ர்த்தெடுத்ததில் தோழர் வீராச்சாமி யின் பங்கு மகத்தானது. தற்பொ ழுதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தில் ஒன்றியத் தலைவராக இருந்து  இறுதிமூச்சுவரை மக்கள் பணியாற்றி னார். சில நாட்களாக உடல் நலிவுற்று இருந்த வீராச்சாமி உடல்நலக் குறை வால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னாரின் உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன த்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், விதொச மாநிலப் பொரு ளாளர் எஸ்.சங்கர், விச மாவட்டத் தலை வர் ஏ.ராமையன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் வி.ரெத்தினவேல், எல்.வடி வேல் மற்றும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி, விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஏ.லாசர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், டி.ரவீந்திரன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், விவசாயிகள் சங்க மாநில உறுப்பினர்கள் பி.டெல்லிபாபு, கே.பி. பெருமாள், சாமி.நடராஜன், எஸ்.பொ ன்னுச்சாமி உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக வீராச்சாமியின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளனர். தோழர் வீராச்சாமிக்கு லோகாம்பாள் என்ற மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இறுதி நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தோழர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

;