புதுக்கோட்டை, ஜூலை 14- புதுக்கோட்டை அரிமளத்தை அடுத்த நெடுங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா, கல்வெட்டுத் திறப்பு விழா, நிதியளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் கிளைச் செயலாளர் சுசி.கணேசன் தலைமை வகித்தார். வீரப்பன் வரவேற்றார். கட்சியின் கொடியை ஏற்றிவைத்து மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், கல்வெட்டைத் திறந்து வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நெடுங்குடி கிளையின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், விதொச ஒன்றியச் செயலளர் க.அடைக்கன் மற்றும் சி.மணி, எம்.அடைக்கப்பன், பி.ஆவுடைமுத்து ஆகியோர் பேசினர்.