tamilnadu

img

தோழர் எம்.உடையப்பன் காலமானார்....

புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மூத்ததலைவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் எம்.உடையப்பன், மே 13 புதனன்று மாலை கறம்பக்குடியில் காலமானார். அவருக்கு வயது 71.புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கும், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சிக்கும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தோழர் உடையப்பன். கறம்பக்குடி மக்களின் அன்பை பெற்று, பேரூராட்சித் தலைவராக இரண்டு முறை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக் கப்பட்டு, திறம்பட செயலாற்றியவர் இவர். தற்சமயம் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவராகவும் செயல் பட்டு வந்தார். இந்நிலையில், உடல் நலக் குறைவால் காலமானார்.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
தோழர் உடையப்பன் மறைவு செய்தி அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ள கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துள்ளார். அவரதுகுடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.தோழர் உடையப்பன் மறைவுக்கு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறது என குறிப்பிட்டுள்ள மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், அவரது இறுதிநிகழ்ச்சி மே 14 (இன்று) காலை11 மணியளவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தோழர் உடையப்பன் மறைவுக்கு விவசாயதொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தோழர் உடையப்பனுக்கு கமலம் என்ற மனைவியும், இரண்டு மகன்கள், மூன்று மகள்களும் உள்ளனர்.

;