tamilnadu

பொதுமக்களுக்கு சான்றிதழ்களை  விரைவாக வழங்க ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை, செப்.18- புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வுக்குப் பிறகு அவர் தெரிவிக்கையில், வருவாய்த் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தடை ஆணை பதிவேடு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவேடு, பட்டா மாறுதல் மேல் முறையீடு பதிவேடு, தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள் பதிவேடு, சாதிச்சான்றிதழ் சரிபார்த்தல் பதிவேடு போன்ற பல்வேறு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் வைப்பறையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஆவணங்களை முறையாக பராமரிக்கவும், பொது மக்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்களை தாமதமின்றி விரைவாக வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர்கள் பரணி, பொன்மலர், ராஜேஸ்வரி உள்ளிட்ட தொடர்புடையவர்கள் உடனிருந்தனர்.

;