tamilnadu

img

சிஐடியு போராட்டம் வெற்றி.... பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு

புதுக்கோட்டை:
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்தது ஈஐடி பாரி ஆலை நிர்வாகம். இது சிஐடியு நடத்திய போராட் டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த ஊனையூரில் உள்ளது ‘ஈஐடி பாரி நியூட்ரா சியூட் டிக்கல்ஸ்’ என்ற தனியார் ஊக்கமருந்து தொழிற்சாலை. இந்த ஆலையில் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த அளவே கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் புதுக் கோட்டை மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்கத்தில் (சிஐடியு) இணைந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதனால் ஆத்திர
மடைந்த ஆலை நிர்வாகம் முன்னணி ஊழியர்களான மணிகண்டன், அருளாந்து ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்தது. ஆலை நிர்வாகத்தின் தொழிலாளர்விரோதப் போக்கை கண்டித்தும், மீண்டும் வேலையில் சேர்க்க வலியுறுத்தியும் கடந்த அக்.5 அன்று ஆலை முன் பாக சிஐடியு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை திருமயம் வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் சிஐடியுமாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும், ஆலை நிர்வாகத்தினரும் பங் கேற்றனர்.பேச்சுவார்த்தையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களான மணிகண்டன், அருளாந்து ஆகிய இருவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இது சிஐடியு நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.