புதுக்கோட்டை, மே 25- கேமரா பொருத்தப்பட்ட ஆள்இல்லா சிறுவிமானம் மூலம் குடிம ராமத்து திட்டப் பணிக்கான அளவீ டுகள் செய்யும் பணிகள் மேற்கொள்ள ப்படுகிறது என்றார் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூ ர்வா. குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆகியோர் கவிநாடு கண்மாய், அன்னவாசல் பெரியகுளம் உள்ளிட்ட பணியிடங்களை நேரில் பார்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். பின்னர் கண்கா ணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்தது. மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தற்பொழுது 43 பணிகள் ரூ.21.75 கோடி மதிப்பீட்டில் செயல்ப டுத்தப்பட உள்ளது.
இதுதவிர ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 115 சிறிய ஏரிகள், குளங்கள், கண்மாய்களும் ரூ.8.62 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட உள்ளது. அதே போன்று மாவட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள கால்வா ய்களை தூர்வாரும் வகையில் 9 பணிகள் ரூ.1.74 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. காவி ரியில் நீர் திறக்கும் போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூர்வாரும் பரப்பின் தற்போ தைய நிலை மற்றும் தூர்வாரப்பட்ட பின் நீர்நிலைகள் எவ்வாறு உள்ளது, எவ்வ ளவு ஆழம் தூர்வாரப்பட்டுள்ளது என்பன போன்ற பணிகளை மே ற்கொள்ள நடந்து சென்று அளவீடுகள் செய்யும் காலஅளவை குறைத்திட உதவிடும் வகையில் அண்ணா பல்க லைக்கழகத்தில் இருந்து முன்னோடி திட்டமாக கேமரா பொருத்தப்பட்ட ஆள்இல்லா சிறுவிமானம் இப்ப ணிக்கு முதன் முதலாக பயன்படு த்தப்படுகிறது. மேலும் பணி முடிவுற்ற பின் தூர்வாரப்பட்டதால் நீரோட்டத்தின் நிலை மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தின் உயர்வு உள்ளிட்டவைகளை அறி வியல் பூர்வமாக கணக்கீடு செய்திட சோதனை அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரி வித்தார்.