tamilnadu

கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் புதுகையில் மேலும் இருவருக்கு தொற்று

புதுக்கோட்டை, மே 6- சென்னை கோயம்பே ட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 3 ஆக  உயர்ந்தது. கொரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 20  ஆம் தேதி மிரட்டுநிலை கிரா மத்தைச் சேர்ந்த இளைஞர்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது. தற்பொழுது அவர் திருச்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் 60 வயது நபர்  ஒருவர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு கடந்த மூன்றாம் தேதி வந்தார். அவருக்கு சுகாதாரத் துறை யினர் பரிசோதனை செய்த தில் கொரோனா நோய்த்  தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதே போல சென்னை யில் இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் ராய வரத்தை அடுத்த ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனை யடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 3  ஆக உயர்ந்துள்ளது. இத னையடுத்து நோய்த் தொற் றுக்கு உள்ளான முதியவரின் வீடு அமைந்துள்ள புதுக்கோட்டை லட்சுமி நகர்ப்  பகுதி மற்றும் சிறுமி நோய்த் தொற்றுக்கு ஆளான ஆயிங்குடி மற்றும் அத னைச் சுற்றியுள்ள பகுதிகள்  முடக்கப்பட்டு வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வரப்பட்டது.