tamilnadu

img

தோழர் நந்தகுமார் நினைவாக நூல்கள் வழங்கும் விழா

அறந்தாங்கி, நவ.21- புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறந்தாங்கி கிளை சார்பாக நடத்தும் தோழர் நந்தகுமார் நினைவாக நூலகத்தி ற்கு நூல்கள் வழங்கும் விழா அறந் தாங்கி கிளை நூலக வளாகத்தில் புதன் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமுஎகச தலைவர் கவிஞர் எம்.கான் அப்துல் கபார் கான் தலைமை வகித்தார். செய லாளர் கவிஞர் சொ.கவி கார்த்திக் வர வேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கவிஞர் சு.கவிபாலா, துணைத் தலைவர்கள் கவிஞர் பி.சேக் சுல்தான், கவிஞர் டைமன்ட் பஷீர் அலி, கிளை நூலகர் ஏ.கார்த்தி கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கியை அடுத்த இயற்கை எழில் கொஞ்சும் பசுமை யான துவரடி மனை எனும் கிராமத் தில் பெற்றோர், மனைவி, மகளுடன் அளவற்ற பாசத்துடன் பழகி வாழ்ந்த வர். முற்போக்கு சிந்தனை, பொது வுடமை எண்ணம், அடுத்தவருக்கு உதவுவதில், பழகுவதில் பொது வாழ்வில் அவருக்கு நிகர் அவரா கவே வாழ்ந்த தோழர் கவிஞர்.நந்த குமார் தனது 41 வயதில் சற்றும் எதிர் பார்க்காத நிலையில் காலமானார்.  அவருடைய நட்பு வட்டமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளுமைகள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தி.க.சி, பிரபஞ்சன், கவிஞர் மேத்தா, சுஜாதா, அருணன், தமிழ்ச்செல்வன், நா.முத்துக்குமார், யுகபாரதி, கவிஞர் முத்துநிலவன், கவிஞர் ஜீவி, முருகேஷ், மார்க்சிஸ்ட் கட்சி புதுகை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வழக்கறிஞர் பா. வெங்கடேசன், இயக்குநர்கள் பாரதி ராஜா, கரு.பழனியப்பன், சீமான். அதோடு ஜி தமிழ் தொலைக் காட்சியில் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் மற்றும் சிறுகதை எழுத்தா ளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஆவணப்பட இயக்குநர் இப்படி பன்முகத் தன்மை கொண்ட தோழர் நந்தகுமார். வாசிப்பு பழக்கம் மிகுந்தவர். பொது வுடமை இயக்க, முற்போக்கு சிந்தனை, வரலாறு, பொருளாதாரம், விவசாயம், தொழிலாளர்கள் பற்றிய கவித்தன்மை உடைய புத்த கங்கள் எங்கு பார்த்தாலும் வாங்கி படித்த துவரடி மனை அவருடைய இல்லத்தில் அலமாரியில் அலங்க ரித்துக் கொண்டிருந்த புத்தகங்கள் இப்பொழுது அனைவரும் பயன் பெறும் வகையில் உயரிய எண்ணத்தில் அறந்தாங்கி கிளை நூலகத்திற்கு அவருடைய தாயார், மனைவி ரேவதி, குழந்தை சஞ்சனா ஆகியோரால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் ஜீவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், வழக்கறிஞர் பா.வெங்கடேசன், தமுஎகச- கவிஞர் கவிபாலா, ஜடியல் பள்ளி தாளாளர் பி.சேக் சுல்தான், டைமன்ட் பள்ளி தாளாளர் பஷீர் அலி, எவர்கிரீன் பள்ளி தாளாளர் முபாரக் அலி, வர்த்தக சங்கத் தலைவர் பா.வரத ராஜன், வாசகர் வட்டத் தலைவர் திரு நாவுக்கரசு, பொறந்த ஊருக்கு புகழை சேரு அமைப்பு ஸ்ரீதர், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலை வர் விஜய், திசைகள் அமைப்பு முபாரக் உள்பட பலர் தோழர் நந்த குமாரோடு பழகிய நிகழ்வுகளை உணர் ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.
கல்விச் செலவை ஏற்க உறுதி
கவிஞர்களின் படைப்புகளை வாசிக்க பழகுங்கள் என்றார் கவிஞர் ஜீவி. ஜடியல் பள்ளி தாளாளர் சேக் சுல்தான் பேசும்போது, 6 வயது நந்தகுமாரின் மகள் சஞ்சனா, 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பை தனது பள்ளியிலும், மருத்துவம் அல்லது பொறியியல் எந்த கல்லூரி படிப்பானாலும் அதற்கான முழு செல வையும் தான் ஏற்றுக் கொள்வதாக உணர்ச்சியோடு உறுதியளித்தார். அறந்தாங்கி நூலகத்தில் புரவலர்க ளாக பலர் சேர்ந்தனர். நிறைவாக ரேவதி நந்தகுமார் நன்றி கூறினார்.