tamilnadu

புதுகையில் வங்கி ஊழியர்கள் 2ஆம் நாள் வேலை நிறுத்தம்

புதுக்கோட்டை, பிப்.1- வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்ட மைப்பின் சார்பில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.  மாவட்டத்தில் உள்ள அனைத்து பொ துத்துறை, கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் 1500-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட வங்கிகள் அடைக்கப்பட்டு இருந்தன. வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழி யர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் ராமதுரை, மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் அருணாசலம்் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;