tamilnadu

img

தமிழ் மாணவர்களுக்கு  விருது வழங்கல்  

பொன்னமராவதி, அக்.21- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முத்தமிழ் பாசறையின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 95 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழ் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முத்தமிழ் பாசறையின் தலைவர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மேனாள் தலைவர் ரமேஷ் வரவேற்றார். விழாவில் அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 95 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாசறை பட்டயமும், தமிழ் ஆசிரியர்களுக்கு தொல்காப்பியர் விருதினையும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ப.மணிசங்கர் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் பேராசிரியர் முனைவர் மா.சிதம்பரம், முத்தமிழ்ப் பாசறையின் அறங்காவலர் குழுத்தலைவர் மருத்துவர் சின்னப்பா, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் நாகராஜன், முத்தமிழ்ப் பாசறையின்  மேனாள் தலைவர்கள் மருத்துவர் மதியழகன், நடராஜன்,  மாணிக்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா நிகழ்ச்சியினை முத்தமிழ்ப் பாசறையின் பொருளாளர் முருகேசன் தொகுத்து வழங்கினார். செயலாளர் சதாசிவம் நன்றியுரையாற்றினார்.