அறந்தாங்கி, ஆக.18- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளதாலும், டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து உள்ளதாலும் சம்பா நெல் நேரடி விதைப்பு செய்யவும், சம்பா நெல் நாற்றங்கால் அமைக்கவும் டிகேஎம் 13 மற்றும் என்எல்ஆர் 34449 ஆகிய சான்று பெற்ற விதைகள் அறந்தாங்கி, அத்தாணி, சுப்பிரமணியபுரம் ஆகிய வேளாண் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1 கிலோ விதைக்கு ரூ17- 50 மானியத்தில் விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் வழங்க தயார் நிலையில் உள்ளது என வேளாண் உதவி இயக்குநர் எஸ்.சொர்ணபாரதி தெரிவித்துள்ளார்.