tamilnadu

img

விதொச நிர்வாகி ஜி.ஸ்டாலின் கைது விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.25- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி. ஸ்டாலினை நாகை மாவட்டப் போலீ சார் கைது செய்துள்ளதை கண் டித்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக பணியாற்றுபவர் ஜி. ஸ்டாலின். இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்திற்காக போராடிய காரணத்திற் காக நாகை மாவட்டப் போலீசார் ஸ்டாலினை திங்கள்கிழமை அதி காலையில் வீடு புகுந்து கைது செய் துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய அராஜக நடவடிக்கை யைக் கண்டித்தும், அவரை உடனடி யாக விடுதலை செய்ய வலியுறுத்தி யும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாநி லப் பொருளாளர் எஸ்.சங்கர் கண் டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமை யன், செயலாளர் எஸ்.பொன்னுச் சாமி, வி.தொ.ச மாவட்டப் பொரு ளாளர் கே.சண்முகம், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் பேசினர். விதொச ஒன்றியத் தலைவர் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறினார்.
சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம் சீர் காழி பழைய பேருந்து நிலையத்தில் கட்சியின் வட்டச் செயலாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டக்குழு உறுப்பி னர்கள் கே.நாகையா, சி.ராஜேந்தி ரன், கே.கேசவன், நீலமேகம், விதொச வட்டத் தலைவர் கிருஷ் ணன், செயலாளர் லெட்சுமணன் ஜி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.