tamilnadu

img

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பு....    எம்.சின்னத்துரை  எம்எல்ஏ நன்றி....

1ஆம் பக்கத் தொடர்ச்சி....

யினர் நல ஆணையம்’ அமைக்கவேண்டும் என வலி யுறுத்தினேன்.

எனது கோரிக்கையை ஏற்று, மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்புஉருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், சமத்துவ மயானத்திற்கு ஊக்கத் தொகை அறிவித்திருப்பது, முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்ற அறிவிப்பு, ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்,அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்தஅறிவிப்புகளை வெளியிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனில் அக்கறை செலுத்தியுள்ள முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனோடு, தலித் ஊராட்சி மன்றத்தலைவர்களிடம் காட்டப்படும் சாதியப் பாகுபாடு, கோவில் திருவிழாக்களில் தலித் மக்கள் மீதான வன்மம்,வன்கொடுமை நிகழ்த்தியவர்களிடமே கவுண்டர் பெட்டிசன் வாங்கிக்கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் காவல்துறையின் பாரபட்சம், புகார் தெரிவித்து 60 நாட்களுக்குள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 21 சதவீதமாக உயர்த்துவது, வன உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு உரிமைகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநில முதலமைச்சர் நிறைவேற்றித் தர வேண்டும்எனவும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

;