tamilnadu

இளைஞர் கொலை வழக்கில் மேலும்  3 பேர் கைது

புதுக்கோட்டை ஜன.20- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்த முத்தையா மகன் சுரேஷ் (35). இவர் கொத்த மங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 7-ஆம் தேதி இரவு கடை வியாபாரம் முடிந்த பிறகு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கீரமங்கலம் காவலர்கள், கொலையா ளிகளை தேடிவந்தனர்.  இந்த சம்பவத்தைக் கண்டித்து கொத்தமங்க லத்தில் 2 நாட்கள் கடை அடைப்பு போராட்டம் நடந் தது. கொலை சம்பவத்தில் ஈடு பட்ட சுரேஷின் உறவினர்க ளான தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், போத்தி ராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் சரவணன் கொடுத்த தகவ லின்படி பட்டுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த கூலிப் படையை சேர்ந்த 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதையடுத்து பட்டுக் கோட்டை கொன்டிகுளம் ராம ராஜன் மகன் ராம்கி (எ) ராம கிருஷ்ணன் (27), அதே கிரா மத்தைச் சேர்ந்த உடையார் தெரு முருகேசன் மகன் செல்வ குமார் (23), அதே கிராமத்தைச் சேர்ந்த சர்கார்தோப்பு பகுதி ஜெகநாதன் மகன் ஸ்ரீபன் ஆகியோரை கைது செய்தனர்.

;