tamilnadu

img

தேர்வறையில் இடமில்லை - புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்

பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வறையில் மாணவர்களுக்கு இடம் இல்லாததால், புல்வெளியில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் பெட்டியவில் உள்ள ராம் லக்‌கான் சிங் யாதவ் கல்லூரியில் நேற்று தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு, தேர்வறையில் இடமில்லாத காரணத்தால் கல்லூரி வளாகத்தில் உள்ள புல்வெளியில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து தேர்வெழுதியுள்ளனர். மேலும், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்து தேர்வெழுதும் வீடியோ வெளியாகியுள்ளது. இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு பொறுப்பாளர், கல்லூரியில் இரண்டாயிரம் பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளதாகவும், ஆனால் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.