tamilnadu

img

பீகார்: மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

 

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மட்டுமல்லாது  பிற மாவட்டங்களிலும் பல குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் நோயால் குழந்தைகளில் ரத்தத்தில் குளுகோஸின் அளவு மிகக் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 146 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும்  ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனைகளில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று என்ற அச்சம் எழுந்துள்ளது. 
இந்நிலையில் லிச்சி பழங்களே மூளைக்காய்ச்சல் நோய்க்கு காரணம் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து சோதனை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத்துறைக்கு அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 
இதனிடையே, குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு திங்களன்று விசாரணைக்கு ஏற்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.