tamilnadu

கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து துவக்கம்?

சென்னை,ஆக.29- தமிழகத்தில் கடும் கட்டுப்பாடு களுடன் போக்குவரத்தை தொடங்க லாம் என்றும் செப்டம்பர் முடியும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டாம் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 7 ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடியும் நிலை யில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சனிக்கிழமையன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  அத னைத் தொடர்ந்து பிற்பகலில் மருத் துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஆலோ சனை மேற்கொண்டார். ஜசிஎம்ஆர் இணை இயக்குநர் பிரதீப் கவுர் தலைமையிலான குழு முதலமைச்ச ருடன் ஆலோசனை நடத்தியது. இதில் தமிழகத்தில் கடும் கட்டுப் பாடுகளுடன் போக்குவரத்தை தொடங்கலாம் என்று மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதை ஏற்று அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.